“தேசிய சமூக நீதிக்கட்சி“
“அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை” என்கிற தான்சார்ந்த சமூக இயக்கமாக முனைவர் மா.வெங்கடேஷ்குமார், நிறுவனத்தலைவர் அவர்களால் துவங்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூக உரிமைகளுக்கான கள போராட்டம், சட்டப்போராட்டம் ,தொழில் பெயரில் சாதிப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சமூகங்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பல்வேறு நலத்திட்டப்பணிகளை மேற்கொண்டு இயங்கி வந்த பேரவையானது, தொடர் களப்பணிகளிளில் மக்களை சந்தித்தபோது, பல்வேறு சமுதயங்களினுடைய நிலையறிந்து, பேரதிர்சியுற்று தொழில் சார்ந்த சமுதாய மக்கள் , தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட , மறுக்கப்பட்ட, அநீதி இழைக்கப்பட்ட, அடக்குமுறைக்கு ஆளாகிய மக்களின் வாழ்வுரிமையும், அரசியல் அதிகாரமும், எதிர்காலத்தின் மிகமுக்கியமான தேவை என்பதை உணர்ந்து கூடுதலாக “தேசிய சமூக நீதிக்கட்சி” என்றபெயரில் அரசியல் கட்சி செயல்பட்டு வருகிறது.
Members
Events
Year Founded
Election
தமிழகம் முழுவதும் வாழும் “ராஜகுலத்தோர்” சமூகமக்களின் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும், அரசியல் பிரதிநிதித்துவம் பெறவும் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம், தரணியெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் விடுதலையை வென்றெடுக்க தன்னை அர்பணித்துக்கொள்கிறது.